டெல்லியின் தென்மேற்கு பகுதியான பாலம் விஹாரில் 19 வயதே ஆன திருமணமான பெண் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 29 அன்று தான் அந்த பெண்ணுக்கு சந்தன் குமார் என்பவருடன் திருமணமானது. அந்த பெண்ணுடைய பெயர் சாதனா என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாதனாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்து குடும்பத்தினர் கூறியிள்ளனர். சாதனாவின் சகோதரன் விகாஷ் இது வரதட்சணை கொடுமையால் நிகழ்த்தப்பட்ட கொலை என குற்றம் சாட்டியுள்ளார்.
காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ள விகாஷ் திருமணமான சில வாரங்களிலேயே சாதனா வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டார் என கூறியுள்ளார்.
காலப்போக்கில் இது சரியாகிவிடும் என நம்பிக்கையோடு இருந்தோம் ஆனால் தற்போது இது இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டது. என்னுடைய தங்கை வரதட்சணை கொடுமையால் தினம்தினம் அவர்களால் தாக்கப்பட்டார், அவர்கள் தான் என் தங்கையை கொலை செய்தனர் என சாதனாவின் சகோதரன் விகாஷ் காவல் துறையில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் காவல் துறையினர் சாதனாவின் கணவர் சந்தன் குமாரை கைது செய்துள்ளனர். சாதனா தற்கொலை செய்துகொண்ட போது தான் தன்னுடைய பெற்றோருடன் வெளியில் சென்றிருந்ததாக சந்தன் குமார் காவல் துறையிடம் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!
நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா
பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!