Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சித் தகவல்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (21:05 IST)
இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வருவதால் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அம்மாநில அரசுக்கும் மாநில மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு உள்பட ஒரு சில நடவடிக்கைகளை பொதுமக்கள் தீவிரமாக கடைபிடித்தால் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments