Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் பனிமலையில் மாயமான இராணுவ வீரரின் உடல் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2014 (18:38 IST)
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சியாச்சின் சிகரம் இராணுவ வீரர்கள் பாதுகாப்பில் இருக்கும் மிக உயரமான இடமாகும். இங்கு கடந்த 1996 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரியைச் சேர்ந்த ஹவில்தார் கயா பிரசாத் என்ற இராணுவ வீரர் பணயில் இருந்தபோது திடீரென காணாமல் போனார்.
அவரது உடல் 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளது. ‘‘அவரது உடல் சண்டிகார் கொண்டுவரப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும். அவர் எப்படி இறந்தார் என்ற தகவல் உடனே தெரியவில்லை.
 
பனிச்சரிவு காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். அவர் மாயமானபோது 15 ராஜ்புட் யூனிட்டில் பணியில் இருந்தார்’’ என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
உலகிலேயே மிக உயரமான போர்க்களம் சியாச்சின் ஆகும். இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 60 டிகிரிக்குச் செல்லும். 1984 ஆம் ஆண்டில் இருந்து அங்கு இந்தியா-பாகிஸ்தான் தரப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments