படுத்து கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட 17 வயது சிறுவன் உயிரிழப்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

Siva
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (20:32 IST)
படுத்து  கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட 17 வயது சிறுவன் தொண்டையில் ரசகுல்லா சிக்கி உயிரிழந்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் படுக்கையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட 17 வயது சிறுவன், ரசகுல்லா தொண்டையில் திடீரென அடைத்துக்கொண்டதை அடுத்து மூச்சு திணறி அந்த சிறுவன் உயிரிழந்தார்.

ரசகுல்லா தொண்டையில் அடைத்ததும் சில நிமிடங்கள் மூச்சு விட சிரமப்பட்டதாகவும் அதன் பிறகு உயிர் இழந்ததாகவும் அந்த சிறுவனின் பெயர் அமித் சிங் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 வெளியூரில் வேலை செய்யும் அந்த சிறுவன் விடுமுறையில் வீடு திரும்பிய நிலையில் அவருடைய மாமா ரசகுல்லா வாங்கி கொடுத்துள்ளார். சிறுவன் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டே படுத்துக்கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட நிலையில் திடீரென தொண்டையை அடைத்தது.

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் சிறுவன் மூச்சு விட சிரமப்படுவதை யாரும் கவனிக்கவில்லை. சில நிமிடங்களில் சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சிறிது நேரம் கழித்து சிறுவனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments