Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் இடி மின்னலுடன் கனமழை - 17 பேர் பலி!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (08:58 IST)
பீகாரில் மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில், மின்னல் தாக்கியதில் பல மாவட்டங்களில் மக்கள் சிலர் உயிரிழந்தனர்.

 
ஆம், பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர். பகல்பூர் மாவட்டத்தில் 6, வைஷாலி மாவட்டத்தில் 3, பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2, முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என 17 பேர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் இது குறித்து முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளதாவது, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மக்கள் மோசமான வானிலையில் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். இடியுடன் கூடிய மழையின் போது பேரிடர் மேலாண்மை குழு வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments