Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திராவில் லாரி கவிழ்ந்து விபத்து : 16 பேர் பலி

ஆந்திராவில் லாரி கவிழ்ந்து விபத்து : 16 பேர் பலி
, திங்கள், 14 செப்டம்பர் 2015 (09:43 IST)
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
அங்குள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம் கண்டேபள்ளி என்ற கிராமத்தில் தான் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது. மேற்கு கோதாவரியைச் சேர்ந்த 35 தொழிலாளிகள் சிமெண்ட் கலவை பாரத்தை ஏற்றிச் சென்ற லாரியில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.


 
 
கண்டேபள்ளி கிராமத்தை நெருங்கிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கலவை தொழிலாளிகள் மீது கொட்டியது. இதனால் அலறித்துடித்த அவர்களை உள்ளூர் கிராம மக்கள் உதவியுடன் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்தததே விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil