முகமது நபி சர்ச்சை; இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும்! – 15 நாடுகள் கண்டனம்!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (11:53 IST)
முகமது நபி குறித்து பாஜக பிரமுகர் பேசிய விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.

இதுகுறித்து பாஜக விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியும் உத்தரவிட்டுள்ளது. இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்து இந்திய அரசும் அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் கடும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. பாஜக செய்தி தொடர்பாளரின் கருத்துக்கு ஈரான், ஈராக், குவைத், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா உள்ளிட்ட 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் சில நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments