சிவபெருமான் பக்தர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையில் 15 அடி ஆழ பள்ளத்தை தோண்டி மக்களுக்கு இடையூரு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லாகான் மனோஜ் ஒரு சிவபக்தர். அவரது கனவில் சிவன் வந்து பூமியில் லிங்கம் புதைந்துள்ளதாகவும், அதனை எடுத்து கோவில் கட்டி வழிபடுமாறும் கூறியதாக தெரிவித்தார்.
இதனையடுத்து ஹைதராபாத்- வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் பூஜை செய்து கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் குழி தோண்டியுள்ளனர்.
இந்நிலையில், 15 அடி ஆழத்திற்கு பெரிய குழியாக வெட்டிய பிறகும் லிங்கம் கிடைக்கவில்லை.
நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெறிசல் அதிகமானதால் போலீஸார் தகவல் அறிந்து வந்து மனோஜ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.