Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாடியோவ் ஒரு எம்எல்ஏவுக்கு 15 கோடி விலை: கூவத்தூர் பாலிசியை பின்பற்றும் பாஜக?

அம்மாடியோவ் ஒரு எம்எல்ஏவுக்கு 15 கோடி விலை: கூவத்தூர் பாலிசியை பின்பற்றும் பாஜக?

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2017 (19:31 IST)
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஆட்சியை காப்பாற்ற சசிகலா கூவத்தூர் பாலிசியை அறிமுகப்படுத்தினர். அங்கு நடந்த சம்பவங்கள் நாடே அறிந்த கதை.


 
 
இந்நிலையில் இந்த கூவத்தூர் பாலிசியை குஜராத்தில் பாஜக பின்பற்றுவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 கோடி ரூபாய் கொடுத்து பாஜக தங்கள் பக்கம் இழுக்க விலைபேசி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
 
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவின் ஸ்மிருதி இரானி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் அகமது படேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அகமது படேல் வெற்றிபெற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரின் வாக்குகள் தேவை. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது.
 
அதன் பலனாக முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூன்று பேர் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டனர். இதனையடுத்து உஷாரான காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்கள் 44 பேரையும் அவசர அவசரமாக குஜராத்தில் இருந்து பெங்களூருவிற்கு அழைத்து சென்று சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 கோடி ரூபாய் கொடுத்து பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக பெங்களூருவில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் கூறியதாக தகவல்கள் வருகின்றன. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments