பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி தலைவரும், உத்தரபிரதேச முதலமைச்சருமான மாயாவதி அறிவித்துள்ளார்.
அன்றைய தினம், அனைத்து மாநில தலைநகரங்களிலும் நாள் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசு, பணக்காரர்களுக்கு ஆதரவாகவும், சாதாரண மக்களுக்கு எதிராகவும் நடந்துகொள்வதாக மாயாவதி அப்போது குற்றம்சாற்றினார்.