Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு - மஹராஷ்டிர முதல்வர் அதிரடி

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (21:18 IST)
மஹராஷ்டிராவில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள்  முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்

இந்நிலையில், இந்தியாவிலேயே மஹராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 1,-9,10 ,11 ஆம் வகுப்பு மாணவர்களைத் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக  அம்மாநில அரசு அறிவித்த நிலையில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மே மாத இறுதியிலும், 10 ஆம் வகுப்பு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று மஹராஷ்டிராவில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் அடுத்த 15 நாட்களுக்கு தடை உத்தரவு அமல்படுத்ஹ்டப்படுவதாக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments