Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

Siva
ஞாயிறு, 7 ஜூலை 2024 (14:00 IST)
14 வயது சிறுமி தனது காதலை ஏற்க மறுத்ததை அடுத்து சிறையில் இருந்த 26 வயது இளைஞர் ஜாமினில் வெளிவந்து அந்த சிறுமியை வீடு புகுந்து வெட்டி கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் 26 வயது சுரேஷ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த சிறுமி சுரேஷை காதலிக்க மறுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் சிறுமிக்கு காதல் தொந்தரவு அளித்த சுரேஷ் மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
 
இதனை அடுத்து போலீசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைதான சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சிறுமியின் வீட்டை அவர் அவ்வப்போது நோட்டமிட்ட நிலையில் சிறுமியின் பெற்றோர் இல்லாததை அறிந்து அந்த நேரத்தில் திடீரென அவர் வீடு புகுந்து சிறுமியை சரமாரியாக வெட்டி உள்ளார்.
 
இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுமி சம்பவம் இடத்திலேயே  உயிர் இழந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியை வெட்டி கொலை செய்த சுரேஷ் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி என்ற பகுதியில் நடந்த இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments