Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோழியை கூட்டாக பலாத்காரம் செய்த சிறுவர்கள்!

தோழியை கூட்டாக பலாத்காரம் செய்த சிறுவர்கள்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (10:02 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எட்டாம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை அவரது பள்ளி நண்பர்களான ஐந்து சிறுவர்கள் கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
பள்ளியில் நடைபெற இருந்த விழாவில் நடனமாட அந்த 14 வயது சிறுமி வீட்டில் நடன பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது தனது நண்பர்களான ஐந்து சிறுவர்களை தன்னுடன் நடன பயிற்சியில் கலந்துகொள்ள அழைத்துள்ளார்.
 
இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி சிறுமியின் வீட்டிற்கு நடன பயிற்சிக்கு சென்ற சிறுவர்கள் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி தங்கள் தோழியை கூட்டாக பலாத்காரம் செய்துவிட்டு, வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர்.
 
ஆனால் சில நாட்கள் இதனை மறைத்த சிறுமி பின்னர் தனது பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். தனது மூத்த மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், இந்த நேரத்தில் இது வெளியே தெரிந்துவிட்டால் அவமானமாகிவிடும் என பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளிக்காமல் மறைத்து வந்தனர்.
 
ஆனால் இந்த கூட்டு பலாத்காரம் குறித்து எப்படியோ தகவல் அறிந்த காவல் துறையினர் புகார் அளிக்க சிறுமியின் பெற்றோர்களை வலியுறுத்தினர். இதனையடுத்து அந்த சிறுவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த ஐந்து சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments