Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை நிர்வாணமாக்கி தலைகீழாக கட்டி வைத்து அடித்த கொடூரன்!

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (20:10 IST)
உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் இரும்பு குழாய்களை சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் இருந்து இரும்பு குழாய்களை திருடியதாக 14 வயது சிறுவன் ஒருவனை நிர்வாணமாக்கி தலைகீழாக கட்டி வைத்து அடித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இரும்பு குழாய்களின் திருட்டு குறித்து கிடங்கின் உரிமையாளர் முதலில் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், ஆதாரம் இல்லாத காரணத்தால் போலீஸார் இந்த புகாரை நிராகரித்தனர். 
 
ஆனால், ஆத்திரம் அடங்காத அந்த கிடங்கின் முதலாளி சிறுவனை கிடங்கிற்குள் அழைத்து சென்று நிர்வாணமாக்கி, தலைகீழாக கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளார். 
 
இந்த செயலை பார்த்த மற்ற தொழிலாளர்கள் இதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டதால் போலீஸார் அந்த கிடங்கின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர்கள் பெரிய கருப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. 20 வயதில் சோகம்..!

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடைபெறும்.. மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞர் கைது..!

‘ரூ’ மட்டும் போட்டால் போதுமா? தமிழை பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்றுங்கள்: ராமதாஸ்

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்

அடுத்த கட்டுரையில்
Show comments