Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை நிர்வாணமாக்கி தலைகீழாக கட்டி வைத்து அடித்த கொடூரன்!

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (20:10 IST)
உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் இரும்பு குழாய்களை சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் இருந்து இரும்பு குழாய்களை திருடியதாக 14 வயது சிறுவன் ஒருவனை நிர்வாணமாக்கி தலைகீழாக கட்டி வைத்து அடித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இரும்பு குழாய்களின் திருட்டு குறித்து கிடங்கின் உரிமையாளர் முதலில் போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில், ஆதாரம் இல்லாத காரணத்தால் போலீஸார் இந்த புகாரை நிராகரித்தனர். 
 
ஆனால், ஆத்திரம் அடங்காத அந்த கிடங்கின் முதலாளி சிறுவனை கிடங்கிற்குள் அழைத்து சென்று நிர்வாணமாக்கி, தலைகீழாக கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளார். 
 
இந்த செயலை பார்த்த மற்ற தொழிலாளர்கள் இதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டதால் போலீஸார் அந்த கிடங்கின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments