Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (19:53 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் தினந்தோறும் தமிழகத்தை விட இரு மடங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருக்கும் நிலையில் இன்றும் அதே போல் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 14,859 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் 4,031 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இன்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 78 என்றும் அம்மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்றோர்களின் எண்ணிக்கை 1,07,315 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,24,509என்றும் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,03,985 என்றும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,190 என்றும் மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் எல்லை மீறி சென்று கொண்டிருப்பதால் விரைவில் லாக்டவுன் உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments