Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 நாள் நீதிமன்றக் காவலில் மாதுரி குப்தா

Webdunia
சனி, 1 மே 2010 (12:35 IST)
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட இந்தியத் தூதரக அதிகாரி மாதுரி குப்தாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகி‌‌‌‌ஸ்தானின் இஸ்லாபாத்தில் உள்ள இந்தியத் தூதரத்தில் பணிபுரிந்தவர் மாதுரி குப்தா. இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு அளிக்க ரகசிய தகவல்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், காவல்துறை விசாரணை முடிந்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் மாதுரி குப்தா. மேலும் 2 நாட்கள் விசாரணைக் காவலில் அனுமதிக்க காவல் துறையினர் நீதிமன்றத்தில் கோரினர்.

காவல் துறையின் கோரிக்கையை நிராகரித்த டெல்லி நீதிமன்றம், மாதுரி குப்தாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments