Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்கள் தேர்ச்சி.! 10 ஆம் வகுப்பு தேர்வில் சாதனை..!!

Senthil Velan
வியாழன், 9 மே 2024 (15:36 IST)
கேரளாவில் ஒரே பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 13 இரட்டையர்களும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரளாவில் கடந்த மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. நேற்று மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது. 
 
இதில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொடியாத்தூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இந்த பள்ளி மாவட்ட அளவில் மற்றுமொரு சாதனையும் படைத்துள்ளது. அதிகப்படியான மாணவர்கள் இந்த பள்ளியில் இருந்து இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர்.

ALSO READ: இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல்..! தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்..!
 
அதாவது 877 மாணவர்கள் ஒரே நேரத்தில் இந்தப் பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதி உள்ளனர். தற்போது, தேர்வில் வெற்றிபெற்ற இரட்டையர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments