Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏஎன் 32 ரக விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழர்!

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (16:25 IST)
ஏஎன் 32 ரக விமானப்படை விபத்தில் உயிரிழந்த 13 பேரில் தமிழகத்தை சேர்ந்தவரும் ஒருவர் என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. 
 
ஜூன் 3 ஆம் தேதி ஏ.என்.32 ரக விமானம்  அசாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்த நிலையில் அந்த விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் இந்த விமானம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதில் பயணம் செய்த 13 பேர்களின் உடல்களும் மீட்கப்பட்டது. இந்த உடல்களின் அடையாளர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் பலியான 13 பேர்களில் கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் ஒருவர் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கடந்த 2011 முதல் வினோத் ஹரிஹரன் விமானப்படையில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments