Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 13 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2014 (18:44 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 13 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் திடீரென சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
பலியான 13 வீரர்களில் 2 பேர் சிஆர்பிஎப் படை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ௦தாக்குதல் நடந்த சுக்மா வனப்பகுதி தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
கடந்த மாதம்தான் சுக்மா வனப்பகுதியில் மாவோயிடுகளுடன் சண்டையிட்டு காயமடைந்த சிஆர்பிஎப் வீரர்களை கொண்டு செல்ல அந்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்துபடை மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments