Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 13 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 13 சிஆர்பிஎப் வீரர்கள் பலி
, திங்கள், 1 டிசம்பர் 2014 (18:44 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 13 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் திடீரென சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
பலியான 13 வீரர்களில் 2 பேர் சிஆர்பிஎப் படை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ௦தாக்குதல் நடந்த சுக்மா வனப்பகுதி தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
கடந்த மாதம்தான் சுக்மா வனப்பகுதியில் மாவோயிடுகளுடன் சண்டையிட்டு காயமடைந்த சிஆர்பிஎப் வீரர்களை கொண்டு செல்ல அந்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்துபடை மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil