Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மீண்டும் உயரும் கொரோனா: இன்று ஒரே நாளில் 13,563 பேர் பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (18:37 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது 
 
இந்திய அளவில் தற்போது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது என்பதும் தமிழகத்தில் சுமார் 3000 பேர்கள் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் 13,563 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 130 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்து இருப்பதாகவும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 1.13 லட்சம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments