Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மீண்டும் உயரும் கொரோனா: இன்று ஒரே நாளில் 13,563 பேர் பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (18:37 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது 
 
இந்திய அளவில் தற்போது தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது என்பதும் தமிழகத்தில் சுமார் 3000 பேர்கள் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் 13,563 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 130 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்து இருப்பதாகவும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 1.13 லட்சம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments