Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர் கண் எதிரே 12 வயது சிறுமியை இழுத்துச் சென்று பலாத்காரம் செய்த கும்பல்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (17:18 IST)
பெற்றோர்கள் கண் எதிரே 12 வயது சிறுமி தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், இரவு 10 பேர் கொண்ட கும்பல் புறநகர் பகுதியில் வசிக்கும் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்துள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் சிறுமியின் பெற்றோர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் சிறுமியின் தந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
 
மேலும், தடுக்கச் சென்ற சிறுமியின் சகோதரனையும் பலமாக தாக்கியுள்ளனர். பின்னர், பெற்றோர்களை வீட்டிற்குள் அடைத்துவிட்டு சிறுமியை அந்த கும்பல் சிறிது தூரம் தரதரவென்று இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
 
இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்