Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயை கொலை செய்த 12 வயது மகள்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (11:24 IST)
தாயை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது மகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பத்தீபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி கம்ரூல் நிஷா. திருமணமாகி பல நாட்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் 12 வருடத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். முஹமது மும்பையில் வேலை செய்து வரும் நிலையில், அவரது மனைவியும் வளர்ப்பு மகளும் பத்திபூரில் தனியாக வசித்து வந்தனர்.
 
மகள் பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் வைத்துக்கொண்டு, ஊர்சுற்றியதால் அவரை தாய் கம்ரூல் நிஷா கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகள் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தனது வளர்ப்பு தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் நிஷாவின் உடலை கைபற்றி, வளர்ப்பு மகளை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments