Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று ஒரே நாளில் 12 பேர்களுக்கு கொரோனா

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (21:16 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் 28 பேர் இருக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் கேரளாவில் மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கேரளாவில் எர்ணாகுளத்தில் 5 பேருக்கும் காசர்கோடு மாவட்டத்தில் 6 பேருக்கும் பாலக்காட்டில் ஒருவருக்கும் என இன்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டபடி வரும் 22ஆம் தேதி மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர் பினராயி விஜயன், மக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியில் நடமாட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வெளியில் நடமாடுவதை சுத்தமாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments