Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உடல் சிதறி 11 பேர் பலி

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உடல் சிதறி 11 பேர் பலி
, வியாழன், 7 மே 2015 (13:28 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பிங்லா என்ற பகுதியில் ஒரு பட்டாசு ஆலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் தீ பிடித்து எரிந்ததால் ஆலையில் இருந்த அப்பாவி தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி கொண்டனர்.
 
இந்த கோர சம்பவத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். மேலும் சிலரது உடல்கள் கருகிய நிலையிலும் உள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil