Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தது 100 ரூபாய்க்கும் ஆப்பு?: புதிய 100, 150, 20 ரூபாய் நாணயம் தயார்!

அடுத்தது 100 ரூபாய்க்கும் ஆப்பு?: புதிய 100, 150, 20 ரூபாய் நாணயம் தயார்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (11:13 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


 
 
தற்போது கையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது செலவுக்கு கையில் பணம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கையில் உள்ள 500, 1000 ரூபாய்க்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது. இந்நிலையில்  அடுத்ததாக 100 ரூபயையும் அரசு செல்லாது என அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
100 ரூபாய் நோட்டுகளை முடக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய 100, 150, 20 ரூபாய் நாணயங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மக்கள் கையில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் ஓரளவுக்கு வந்த பிறகு அடுத்த வருட தொடக்கத்தில் 100 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments