ஒரே கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:44 IST)
பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
ஒரே கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா எப்படி என்பது குறித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஜீரோ.. பிகாரில் என்டிஏ ஜெயிக்க அவர்தான் காரணமா

தீபாவளிக்கே வெடிக்க வேண்டிய வெடிகுண்டு.. கைதான நபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!

போலீசாருக்கு ரூ.50 லட்சம் கொடுத்தாரா நடிகர் ஸ்ரீகாந்த்? அமலாக்கத்துறை விசாரணை..!

தமிழகத்தில் 342 வெடிகுண்டு மிரட்டல்கள்.. குற்றவாளிகள் சென்னையை சேர்ந்தவர்கள்: காவல் துறை ஆணையர்

தேர்தல் முடிந்த சில மணி நேரத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments