Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (07:40 IST)
மத்திய பிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில்10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சார்வேட் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு மூன்று மாடி கட்டிடம் இருந்தது. அந்த மூன்று மாடி கட்டிடமானது நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய பலர் தங்களை காப்பாற்றுமாறு சத்தமிட்டனர்.
 
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments