Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாத குழந்தையை பலாத்காரம் செய்த 30 வயது காம கொடூரன்!

10 மாத குழந்தையை பலாத்காரம் செய்த 30 வயது காம கொடூரன்!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (11:31 IST)
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பிறந்து 10 மாதம் ஆன பெண் குழந்தை ஒன்று குடும்ப உறுப்பினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஜாம்நகர் மாவட்டத்தில் முடிதிருத்தம் செய்ய கடை ஒன்றை நடத்தி வருகிறார் குழந்தையின் தந்தை. சம்பவம் நடந்த அன்று இரவு குழந்தையின் தந்தையின் உறவினரான முகேஷ் தகோர் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
 
30 வயதான முகேஷ் தகோர் குழந்தையை வெளியே கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு அவசர அவசரமாக கிளம்பி சென்றுவிட்டார்.
 
அதன் பின்னர் குழந்தை அழுததை தொடர்ந்து குழந்தையை பெற்றோர் சோதனை செய்தனர். அதில் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்த கறை இருந்ததை கண்ட குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த அவர்கள் குழந்தை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட முகேஷ் தகோர் மீது காவல் துறை பல்வேறு வழக்குகள் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்