Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தை புரட்டி போட்ட புயல்: 10 பேர் பலி

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (11:48 IST)
மேற்கு வங்கம் மாநிலத்தில் நேற்று காலையில் இருந்து பெய்து வரும் புயல் மழையால், குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.



 
 
மேற்கு வங்கத்தில் புயல் காரணமாக 98 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. மழையின் காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது . கொல்கத்தா, ஹவுரா நகரில் உள்ள வீடுகள், மரங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளது. 
 
மேலும்,அங்கு மின்கம்பங்கள் அதிகமாக சாய்ந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் பாதிப்பால் இதுவரை குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர், பலர் காயம் அடைந்துள்ளனர்.
 
இதனால் அங்கு ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல் பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பலத்த புயல் மழை பெய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments