Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1-9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ்: கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (12:33 IST)
புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என * புதுவை கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு செய்துள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருப்பதால் எந்த வகுப்பிற்கும் இன்னும் முழு ஆண்டு தேர்வு நடத்தப்படவில்லை. இன்னும் 21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இனிமேலும் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் சற்றுமுன் புதுவை கல்வித்துறை இயக்குநர் அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படித்து வரும் அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற ஒரு அறிவிப்பை தமிழக கல்வித்துறை இயக்குநரும் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments