Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

Prasanth Karthick
புதன், 18 செப்டம்பர் 2024 (10:14 IST)

மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படும் ஆண்டி பயாடிக் மருந்துகளால் இந்தியாவில் பலர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள லான்செட் ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியா முழுவதும் 150+ கோடி ஜனத்தொகை உள்ள நிலையில் அனைவருக்கும் அடிப்படையான மருத்துவ சேவைகள் கிடைப்பது பல பகுதிகளில் சிரமமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகளவில் உட்கொள்வதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பலியாவதாக லான்செட் மருத்துவ ஆய்விதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

பொதுவாக காய்ச்சல், காயங்கள் தொடங்கி உடலின் பல்வேறு பாதிப்புகளுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு வகையான ஆண்டிபயாடிக் மருந்துகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒருவருக்கு ஆண்டிபயாடிக் மருந்து தேவையா இல்லையா என்பதை அறிய நோயாளியின் ரத்தம், சிறுநீர் போன்றவற்றில் உள்ள கிருமிகளை ஆய்வு செய்து அதன்பின்னர் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் அனைத்து விதமான நோய்களுக்கும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
 

ALSO READ: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. நேரம் ஒதுக்கப்பட்டதா?
 

மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள் நோயாளியின் வயது, உடல் எடை, நோய் பாதிப்பின் தன்மை குறித்து மாறுபடும். அதனால் எவ்வளவு காலத்திற்கு அவர்கள் ஆண்டி பயாடிக் எடுக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் சரியாக அவர்களுக்கு விளக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்களில் ஆண்டிபயாடிக்குகளை வாங்கி பயன்படுத்துவது போன்றவையும் இதற்கு முக்கிய காரணியாக உள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments