Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி சான்றிதழ் விவகாரம்: பீகாரில் 1,400 ஆசிரியர்கள் ராஜினாமா

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2015 (09:45 IST)
பீகாரில் போலி சான்றிதழ்கள் அளித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,400 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
 
பீகார் மாநிலத்தில் பணியாற்றி வரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பலர் போலி கல்வி சான்றிதழ்கள் அளித்து பணியில் சேர்ந்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி தலைமையிலான அமர்வு, கடும் நடவடிக்கையை தவிர்க்க போலி ஆசிரியர்கள் தாங்களாகவே பணியில் இருந்து விலக வேண்டும் என உத்தரவிட்டது.
 
இதையடுத்து போலி ஆசிரியர்கள் பணி விலக 8 ஆம் தேதிவரை மாநில கல்வி துறை கெடு விதித்தது. இந்நிலையில் போலி சான்றிதழ்கள் கொடுத்து தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த 1,400 ஆசிரியர்கள் ராஜினாமா செய்தது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து கல்வி துறை முதன்மை செயலாளர் மகாஜன் கூறுகையில், "கெடு முடிவதற்குள் மேலும் பலர் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். 8 ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்யாத போலி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments