Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் முதல்வர்

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (19:21 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்தது. அந்த வகையில் இன்று மட்டும் கேரளாவில் 1,038 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டு இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி கேரள மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக கேரளாவில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கேரளாவில் 1,038  பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கேரள கேரள முதல்வர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.  குறிப்பாக அதிகபட்சமாக தலைநகர் திருவனந்தபுரத்தில் 226 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே இந்த அதிர்ச்சிக்கு காரணம். மேலும் கேரளாவில் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,818 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
தமிழகம் உட்பட இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்றாலும் இன்றைய அதிகபட்ச பாதிப்பு காரணமாக முதல்வர் பினராயி விஜயன் அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments