Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'2ஜி: தொலைபேசி நிறுவனங்களுக்கு இடையே போர்'

Webdunia
புதன், 2 மார்ச் 2011 (19:55 IST)
தொலைபேசி நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், தொலைபேசி சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

சில நிறுவனங்கள் 2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் அரசின் கொள்கையை ஆதரிக்கின்றன. சில நிறுவனங்கள் எதிர்க்கின்றன.

எனவே இவ்விடயத்தில் தொலைபேசி நிறுவனங்களின் நிலை என்ன என்று கேட்டபிறகு அரசுக்கு வாதம் செய்வது நல்லதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இவ்வழக்கில் முக்கியமான விடயம் அரசின் கொள்கை தொடர்பானது என்பதால், அரசு முதலில் தனது நிலையை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments