மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தி மொழியில் மிகச்சிறந்த சேவையாற்றியதற்காக `இந்திரா காந்தி ராஜ் பாஷா' விருது உள்ளிட்ட விருதுகளை 47 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று வழங்கினார்.
`ஹிந்தி தினம்' கொண்டாடப்படுவதையொட்டி இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ரொக்கப்பணத்துடன் கேடயமும், சான்றிதழும் இந்த விருதில் அடங்கும்.
ராஜீவ் காந்தி தேசிய விருது, இந்திரா காந்தி ராஜ்பாஷா விருது, ஹிந்தி கிரி பத்ரிகா விருது ஆகியவை இவற்றில் அடங்கும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.