Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மும்பை கற்பழிப்பு குற்றவாளிகள் மேலும் இரு பெண்களை கற்பழித்துள்ளனர்'

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2013 (14:07 IST)
FILE
மும்பை கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஏற்கனவே இரண்டு பெண்களை அதே பழமையான கட்டிடத்தில் வைத்து கற்பழித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டார்.

இந்த கொடூரத்தை செய்த 5 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் தெரியவந்துள்ளன.

விசாரணையின் போது அக்குற்றவாளிகள், அதே மில் வளாகத்தில் குப்பை பொறுக்கும் பெண் மற்றும் விபச்சாரம் செய்யும் பெண் என இரண்டு பேரை கற்பழித்ததாக தெரிவித்துள்ளனர்

மேலும் அந்த மில் பகுதிக்கு தனது ஆண் நண்பருடன் வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். கடந்த 6 மாதத்தில் நடந்த இந்த 3 சம்பவங்கள் குறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை.

அந்த 5 பேரும் திட்டமிட்டு தான் கற்பழிப்பு குற்றங்களை செய்து வந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!