மகாராஷ்டிராவின் கஞ்சூர்மார்க் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய். இவருக்கு வயது 42. இவரது மனைவி பெயர் சஞ்சனா கோல்வாங்கர். 38 வயதான சஞ்சனாவிற்கு திருமணமாகி 7 வருடமாகி விட்டது.
குடும்பத்தில் நிலவிய சொத்து பிரச்சனை காரணமாக சஞ்சனாவை அவரது மாமியார், கணவர் மற்றும் கணவரின் தங்கை ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மன உளைச்சல் அதிகமான காரணத்தினால் வேதனை அடைந்த சஞ்சனா தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடல் முழுவதும் எரிந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு நான்கு நாள் சிகிச்சைக்குப் பின்னர் சஞ்சனா மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன்பு போலீஸுக்கு வாக்குமூலம் அளித்த சஞ்சனா, 'என்னுடைய இந்த முடிவிற்கு என்னுடைய மாமியார், கணவர் மற்றும் கணவரின் தங்கை ஆகியோர் தான் காரணம். இவர்களின் செயலால் தான் நான் வேதனை தாங்காமல் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டேன்.
அப்போது எனது கணவர் நான் எரிவதை ரசித்துப் பார்த்தார். தீயை அணைக்க அவர் முன்வரவில்லை. நான் வலியால் துடித்தபோதும் எனது கணவர் அமைதியாக இருந்தாரே தவிர காப்பாற்ற முயலவில்லை. கடைசியில்தான் எனது உடலில் தண்ணீரை ஊற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர் என தெரிவித்தார்.
சஞ்சனாவின் மரணத்தை அடுத்து, போலீசார் குற்றம் சாற்றப்பட்ட மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.