Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'டீசல் விலை இப்போதைக்கு உயராது'

Webdunia
சனி, 12 நவம்பர் 2011 (14:02 IST)
டீசல் விலை இப்போதைக்கு உயராது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அண்மையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்கட்சிகள் ஒருபுறம், பொதுமக்கள் மறுபுறம் என எழுந்த எதிர்ப்பால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் டீசல் விலையும் உயர்த்தப்படலாம் என்று பேச்சு எழுந்த நிலையில், இப்போதைக்கு அவ்வாறு விலை உயர்த்தும் எண்ணம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டீசல் விலை உயர்த்தப்பட்டால் உணவு பொருட்கள், குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற வற்றின் விலை, போக்குவரத்து செலவு அதிகரிப்பால் தானாகவே உயர்ந்துவிடும்.

அடுத்த ஆண்டில் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது அரசியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே இப்போதைக்கு விலை உயர்வு இருக்காது என்று அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments