லோக்பால் மசோதாவுக்கான கூட்டுக்குழுவில் இடம் பிடித்துள்ள சாந்திபூஷன் தொடர்பாக வெளியான சிடி போலியானது என்று அவரது மகன் மறுத்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக சாந்திபூஷன் பேசுவது போன்று வெளியான சிடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிடியில் உள்ள தகவல் உண்மை என நிரூபிக்கப்பட்டால் சாந்திபூஷனுக்கு தண்டனை வாங்கித் தரப்படும் என்று அண்ணா ஹசாரே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சாந்திபூஷனின் மகன் பிரசாந்த்பூஷன், சி.டி போலியாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது என்றார்.
லோக்பால் மசோதா கூட்டுக்குழுவுக்கு எதிராக சதித் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் 200 நாட்களில் சதித்திட்டத்தின் பின்னணியில் இருப்பவர்களை ஆதாரத்துடன் நிரூபிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.