சாந்தி பூஷண் தொடர்பான சி.டி. உண்மையே, போலியானது அல்ல என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
நீதிபதிக்கு லஞ்சம் தருவது பற்றி சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங், லோக்பால் மசோதா குழுவில் இடம் பெற்றுள்ள சாந்தி பூஷண் பேசியது போன்ற சி.டி. அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சி.டி.யில் உள்ளது முலாயம், சாந்தி பூஷண் குரல்தானா என்பது குறித்து ஆய்வு நடத்த தடவியல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில சி.டி.யில் இடம் பெற்றுள்ள குரல் முலாயம் சிங், சாந்தி பூஷண் ஆகியோரின் குரல்தான் என்று தடவியல் துறை கூறியுள்ளது.
சி.டி. குறித்து ஆய்வு செய்த தடவியல் துறை இன்று டெல்லி காவல்துறையிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த சி.டி. தகவலால் லோக்பால் மசோதா குழுவில் சாந்தி பூஷண் நீடிப்பது மேலும் சிக்கலாகியுள்ளது.