உலக அமைதிக்காகவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் 3 நாள் உண்ணாவிரதத்தை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார்.
குஜராத் பல்கலைக்கழக கண்காட்சி அரங்கத்திற்குள் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முஸ்லீம் மக்களும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் பா.ஜ.க. மூத்தத் தலைவர்கள் அத்வானி, அருண்ஜெட்லி, சுஸ்மா சுவராஜ், ஹேமமாலினி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மோடியின் உண்ணாவிரத்தையொட்டி பலத்து பாதுபாப்பு போடப்பட்டுள்ளது. உண்ணாவிரதப் பந்ததில் 50 க்கும் மேற்பட்ட கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இன்று 61 வது பிறந்த நாள் காணும் நரேந்திர மோடி உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.