பத்திரிகையாளர் ஜே தேவ் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மும்பையை சேர்ந்த பத்திரிகையாளர் ஜே தேவ் கடந்த மாதம் 11ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை மும்பை காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் பத்திரிகையாளர் ஜே தேவ் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், பத்திரிகையார் ஜே தேவ் கொலை வழக்கில் காவல்துறை விசாரணை சரியான திசையில் செல்கிறது என்றும் விசாரணை திருப்திகரமாக உள்ளதால் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்று கூறி மனுவை நிராகரித்தது.