சீனா அதிபர் வருகைக்கு எதிர்ப்பு - தீக்குளித்த திபெத் வாலிபர் பலி
, வியாழன், 29 மார்ச் 2012 (09:35 IST)
சீன அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த திபெத் வாலிபர் உயிரிழந்தார்.சீன அதிபர் ஜின்டாவோ இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம் யாங் யேஷி என்ற 26 வயது திபெத் வாலிபர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தீக்குளித்தார்.உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் சீனாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி ஓடிய திபெத் வாலிபரின் செயலை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர். பலத்த தீக்காயங்களுடன் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.திபெத் சுதந்திரம் தொடர்பான போராட்டத்தில், இந்தியாவில் தீக்குளித்து இறந்த முதல் திபெத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.News Summary : Chinese president arrives in India to Tibet to protest Fire boy died.