ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற தீ விபத்தில் 7 பேர் பலியாயினர்.
ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் குடிசைப் பகுதி ஒன்றில், சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாயினர்; நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.