ஹைதாரபாத்தில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் மீது மோதி நொறுங்கியது. இதில் விமானி பலியானார்.
விபத்துக்குள்ளான கிரண் எம்.கே-2 விமானம் கடற்படையின் ‘சாகர் பவான்’ பிரிவைச் சேர்ந்தது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்ததாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் ஏ.கே.கான் தெரிவித்துள்ளார்.