Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹரித்வார் நெரிசல்: பலி 20 ஆக அதிகரிப்பு!

ஹரித்வார் நெரிசல்: பலி 20 ஆக அதிகரிப்பு!
புதுடெல்லி , புதன், 9 நவம்பர் 2011 (15:59 IST)
ஹரித்வாரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

மதகுரு பண்டிட் ஸ்ரீராம் ஷர்மாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டம், ஹரிதுவாரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

வருகிற 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் ஹரித்வாரில் குழுமினர்.

இந்நிலையில் ஷாந்திகஞ்ச் ஆசிரம வாயிலில் நேற்று திடீரென ஏராளமானோர் ஒன்றாக நுழைய முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முற்பட்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் 4 சடலங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil