ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜசேகர ரெட்டியின் குணம் மற்றும் எளிமை, ஏழைகள் மீது அவர் காட்டிய அக்கறை போன்றவற்றால் பல காலம் நினைவில் நிற்பார் என்று அன்சாரி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
மக்கள் செல்வாக்கு நிறைந்த தலைவர் அவர் என்றும், ஆந்திர மாநில அரசியலில் அவர் தனக்கென் ஒரு இடத்தைப் பிடித்து, ஏழை எளிய மக்களை முன்னேற்றுவதற்காக பாடுபட்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.