ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த நான்கரை மாதத்தில் 363 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளது நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஸ்ரீநகரிலுள்ள ஜி.பி.பிளன்ட் அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு மேலும் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கடந்த நான்கரை மாதத்தில் மட்டும் அந்த மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை 363 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே குழந்தைகளின் உடல்களை வைத்துக் கொண்டு, அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, முறையான மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என அவர்கள் குற்றஞ்சாற்றியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசு, மக்கள் நலன் மீது அக்கறையின்றி செயல்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பெற்றோர்களின் இந்த மறியல் போராட்டத்தால் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.