காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த 3 மாதங்களில் 62 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகரின் ஜிபி பந்த் என்ற ஒரே ஒரு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பணியாளர்கள் மற்றும் தேவையான கருவிகள் பற்றாக்குறை நிலவுகிறது.
அதோடு மருத்துவர்கள் சரியாக பணிபுரிவதில்லை என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்தது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களில் 62 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அண்மையில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.